இது தொடர்பில் நாசா கருத்து தெரிவிக்கையில் நாசாவின் கியூரியோசிட்டி ரோவரில் ஏற்பட்டுள்ள பிழைகளே அது தரவுகளை புவிக்கு அனுப்புவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றது.
இதன் காரணமாகவே செவ்வாய் மீதான ஆராய்ச்சி நடவடிக்கைகளிலும் பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அண்மையில் வெளிவந்த தகவலின் படி கடந்த வாரம் சனிக்கிழமை இரவு அன்று கியூரியோசிட்டி ரோவர் இல் கோளாறு ஏற்பட்டதை விஞ்ஞானிகள் அறிவித்திருந்தனர்.
ரோவர் இல் இருந்து தரவுகள் நல்லபடியாக வந்து கொண்டிருந்த போதிலும். நாசாவால் அதன் நினைவகத்தில் இருந்து சில தரவுகளை பெற முடியாது போயுள்ளது.
சில நாட்கள் முயற்சிகள் செய்தும் கூட நாசாவால் அத்தகவல்களை செவ்வாயிலிருந்து பெற முடியாது போயுள்ளது. ஏற்பட்ட கோளாறை சீர் செய்யும் வரை நாசாவால் மேலதிக ஆய்வுகளை மேற்கொள்ள முடியாது என தெரிய வருகிறது.
ஏனைய தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட தகவல்களை அறிந்துகொள்ள
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH
No comments:
Post a Comment