கடந்த மாதம் அளவில் கூகுள் தவறான முறையில் ஒப்பந்தங்களை மீறி செயல்பட்டதாக கூறி 5000 கோடி டாலர் நஷ்டஈடு வழங்க கோரியிருந்த நிலையில் புதிதாக Location அடிப்படையாகக் கொண்டு வாடிக்கையாளர்களின் இருப்பிடங்களை கண்காணிப்பதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
அந்தக் குற்றச்சாட்டை ஏற்கும் வகையில் தற்போது கூகுள் நிறுவனமானது தங்களுடைய Privacy Policy யில் மாற்றத்தை செய்துள்ளது.
நாம் நமது ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்களில் Location OFF செய்தால் கூட Google நிறுவனத்தினால் நாம் இருக்கின்ற இருப்பிடத்தை அறிந்து கொள்ள முடியும். ஆனால் கூகுள் நிறுவனம் தனது Help பக்கத்தில் அவ்வாறு OFF செய்தாள் அறிந்து கொள்ள முடியாது எனக் குறிப்பிட்டு இருந்தது.
ஆனால் இந்தக் குற்றச்சாட்டின் பின்னர் கூகுள் நிறுவனமானது தங்களுடைய Help பக்கத்தில் அவ்வாறு Location ஐ OFF செய்தாலும் தங்களால் வாடிக்கையாளர்களின் இருப்பிடத்தினை அறிந்துகொள்ள முடியும் என மாற்றம் செய்துள்ளது.
இது தொடர்பாக கூகுளின் செய்தியாளர் ஒருவர் கூறும் போது Google Map மற்றும் Google Search என்பவற்றை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு வாடிக்கையாளர்கள் உச்ச பயனை அடைந்து கொள்வதற்காக இந்த மாற்றத்தினை செய்ததாக கூறியுள்ளார்.
ஏனைய தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை அறிந்து கொள்ள இங்கே செல்லவும்
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH
No comments:
Post a Comment